Author: Sudha Sundaram 0
 20 views

*படித்ததில் பிடித்தது*

*இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*. ❤️????


பாத்து செஞ்ச நம்ம உடம்பு ஒரு லாஜிக்!


டயரு தேயுது ரோட்டுல... ஆனா,

நம்ம பாதம் இரண்டு பாருங்க 

நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. ????

செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!????


உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,

ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்

அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!????


நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,

ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்

ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!????


லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!

நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 

 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் ????


நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,

சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது

சப்பு கொட்டி சண்டை போடும் ????

 

எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!


படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!


மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,

நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த

ஆயிலும் தேவையில்ல, 

on off எதுவும் தேவையில்ல!

தொடர் ஓட்ட சாதனை புரியும்!


சென்சார் இல்லாமலே தோலு உணருது,

கொசு கடிச்சா – கை

சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது????


எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!

ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது

ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!????


எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!

இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை????


பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா ????


படைச்ச இறைவனுக்கு

நன்றி சொல்லி 

பத்திரமா பாத்துக்குவோம் ????


தினமும் காலையில

எழுவது கூட எவ்வளவு 

பெரிய மிராக்கிள் ????


 எல்லா படைப்பையும்

பார்த்து வியப்போம்!

பக்குவமா நடப்போம்!!

நன்றி ????????????